கள்ளக்குறிச்சி அருகே வாடகை பாத்திரக்கடை உரிமையாளரை கொலை செய்த வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கள்ளக்குறிச்சி அருகே  வாடகை பாத்திரக்கடை உரிமையாளரை கொலை செய்த வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

கள்ளக்குறிச்சி அருகே வாடகை பாத்திரக்கடை உரிமையாளரை கொலை செய்த வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கள்ளக்குறிச்சி


கள்ளக்குறிச்சி அருகே உள்ள புதுஉச்சிமேடு கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி. வாடகை பாத்திரக்கடை உரிமையாளரான இவரை முன்விரோத தகராறு காரணமாக கடந்த 26.5.2022 அன்று அதேஊரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராமு என்பவர் தனது உறவினர் ஒருவருடன் சேர்ந்து அடித்து கொலை செய்தார். இதுகுறித்து வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிந்து, ராமுவை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இவர் வெளியே வந்தால், வரும் காலங்களில் தொடர்ந்து இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதாலும், இவரது குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு ராமுவை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்அடிப்படையில் ராமுவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு கலெக்டர் ஸ்ரீதர் வரஞ்சரம் போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார். அதன்பேரில் வரஞ்சரம் போலீசார் குண்டர் சட்டத்தில் ராமுவை கைது செய்ததற்கான உத்தரவு நகலை கடலூர் சிறை அலுவலர்கள் மூலம் ராமுவிடம் வழங்கினர்.


Next Story