கலெக்டரின் கார் முன்பு படுத்து மகனுடன் போராட்டம் நடத்திய பெண்ணால் பரபரப்பு சொத்தை அபகரித்ததாக மருமகன், மகள் மீது புகார்


கலெக்டரின் கார் முன்பு படுத்து மகனுடன் போராட்டம் நடத்திய பெண்ணால் பரபரப்பு  சொத்தை அபகரித்ததாக மருமகன், மகள் மீது புகார்
x

சொத்தை அபகரித்ததாக மருமகன், மகள் மீது புகார் கூறிய பெண், தன்னுடைய மகனுடன் கலெக்டரின் கார் முன்பாக படுத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்

சேலம்,

தாய்-மகன்

ஓமலூர் அருகே ஓலைப்பட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் பாப்பா (வயது 70). இவருடைய மகன் சசிகுமார் (37). இவர்கள் இருவரும் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். அப்போது அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த மாவட்ட கலெக்டரின் கார் முன்பு தரையில் படுத்து போராட்டம் நடத்தினர்.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த டவுன் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட தாய், மகனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசார் கூறுவதை ஏற்காமல் அவர்கள் தரையில் உருண்டு அழுது புரண்டனர். தொடர்ந்து இருவரையும் போலீசார் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

சொத்து அபகரிப்பு

இதுகுறித்து மூதாட்டி பாப்பா கூறுகையில், எனது மகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சீர்வரிசையாக நகை, பணம் கொடுத்து திருமணம் செய்து வைத்தேன். ஆனால் மகளும், மருமகனும் சேர்ந்து மிரட்டி சொத்தை அபகரித்து கொண்டனர். இதுகுறித்து தொளசம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அபகரித்த சொத்தை மீட்டுக்கொடுக்க வேண்டும் என்றார்.

சேலத்தில் சொத்து பிரச்சினையில் தாய், மகன் ஆகியோர் கலெக்டரின் கார் முன்பு படுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story