திருவாதவூர் திருமறைநாதர் கோவில் தேரோட்டம்


திருவாதவூர் திருமறைநாதர் கோவில் தேரோட்டம்
x

திருவாதவூர் திருமறைநாதர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

மதுரை

மேலூர், ஜூன்.12-

மதுரை மாவட்டம் மேலூர் அருகே மாணிக்கவாசகர் அவதரித்த தலமான திருவாதவூரில் பிரசித்தி பெற்ற திருமறைநாதர்-வேதநாயகி அம்மன் கோவில் உள்ளது. இங்கு வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலூருக்கு திருமறைநாதர் எழுந்தருளும் மாங்கொட்டை திருவிழா கடந்த 7-ந் தேதி நடைபெற்றது. மேலும் திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. திருமறைநாதர், வேதநாயகி அம்மன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிந்தனர். கிராம பெரியவர்கள் பாரம்பரிய வழக்கப்படி வழிபட்டு வெள்ளை வீசினர். அதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரின் வடம்பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர். கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பின் பல ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த தேரோட்ட விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால் கோவில் சுற்றுப்பகுதி முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.


Next Story