உப்புக்கோட்டை பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சி


உப்புக்கோட்டை பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சி
x

உப்புக்கோட்டை பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சியடைந்தது.

தேனி

கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளான கூழையனூர், குச்சனூர், பாலார்பட்டி, குண்டலநாயக்கன்பட்டி, உப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி, கத்தரிக்காய், முட்டைகோஸ், பீட்ரூட், முள்ளங்கி, வெங்காயம் ஆகிய காய்கறி பயிர்கள் அதிக அளவு சாகுபடி செய்யப்படுகிறது. முல்லைப்பெரியாற்று பாசனம் மூலம் விளைச்சல் அடையும் இங்குள்ள காய்கறிகள் திறட்சியாகவும், சுவையாகவும் இருப்பதால் வெளி மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கிராக்கி உள்ளது.

இந்தநிலையில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 200 ஏக்கர் பரப்பளவில் கடந்த மாதம் தக்காளி சாகுபடி செய்யப்பட்டது. தற்போது தக்காளிகள் விளைந்து, அவை செடிகளில் இருந்து பறிக்கப்பட்டு விற்பனைக்காக சந்தைக்கு அனுப்பப்பட்டு வருகிறது‌. தக்காளி அமோக விளைச்சல் அடைந்துள்ள அதே நேரம், அதன் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. 15 கிலோ அடங்கிய ஒரு பெட்டி தக்காளி விலை கடந்த வாரம் ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது தக்காளி விலை வீழ்ச்சியடைந்து, 15 கிலோ அடங்கிய ஒரு பெட்டி ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு கிலோ தக்காளி ரூ.10-க்கு விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


Related Tags :
Next Story