லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; ஏ.சி.மெக்கானிக் பலி


லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்;  ஏ.சி.மெக்கானிக் பலி
x

வேலூர் கலெக்டர் அலுவலக மேம்பாலத்தில் லாரி-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஏ.சி.மெக்கானிக் இறந்தார்.

வேலூர்

வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்தவர் சையத்உசேன் (வயது 32), ஏ.சி.மெக்கானிக். இவரும், அவருடன் வேலை பார்ப்பவர் ஹபீஸ் (22). இவர்கள் இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று ஏ.சி. பழுதுபார்த்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில்இன்று சத்துவாச்சாரியில் ஒரு வீட்டில் பணி செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

கலெக்டர் அலுவலகம் எதிரே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளும்-லாரியும் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் சையத்உசேனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காயமடைந்த ஹபீஸை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சையத்உசேனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story