விழிப்புணர்வு பதாகை முறைகேடு புகார் - தமிழக அரசு மறுப்பு


விழிப்புணர்வு பதாகை முறைகேடு புகார் - தமிழக  அரசு மறுப்பு
x

அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டதாக உண்மைக்கு மாறான தகவல்கள் பரவி வருகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

"நம்ம ஊரு சூப்பரு இயக்கம்" குறித்த விழிப்புணர்வு பதாகைகள் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டதாகவும் அதில் முறைகேடு நடைபெற்றதாகவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் "நம்ம ஊரு சூப்பரு இயக்கம்" குறித்த விழிப்புணர்வு பதாகைகள் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டதாக உண்மைக்கு மாறான தகவல்கள் பரவி வருகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

விழிப்புணர்வு பதாகைகள் நிறுவியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் தொடர்பாக மறுப்பு தெரிவித்து அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

பதாகைகள் நிறுவியது தொடர்பாக மாவட்டங்களில் இருந்து விவரங்கள் பெறப்பட்டதுஅச்சடிக்கும் பணியில் எந்த தனியார் நிறுவனமும் ஈடுபடுத்தப்படவில்லை . மாநிலம் முழுவதும் உள்ள 89 நிறுவனங்கள் மூலம் 27 மாவட்டங்களில் பதாகைகள் அச்சிடப்பட்டுள்ளன.மாநிலம் முழுவதும் உள்ள 89 நிறுவனங்கள் மூலம் 27 மாவட்டங்களில் பதாகைகள் அச்சிடப்பட்டுள்ளன

ஒரே ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது என்பது உண்மைக்கு புறம்பான தகவல் -பதாகைகள் நிறுவிட, பேனர் ஒன்றுக்கு ₨7,906 செலவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது தவறானது.சராசரி மதிப்பீடாக பேனர் ஒன்றிற்கு சுமார் ரூ.611 (சரக்கு, சேவை கட்டணம் உட்பட) செலவிடப்பட்டுள்ளது. என தமிழக அரசு கூறியுள்ளது .


Next Story