அடுத்தடுத்த சுற்றுகளின் வாக்கு நிலவரம் விரைவில் வெளியாகும் - மாவட்ட தேர்தல் அதிகாரி பேட்டி


அடுத்தடுத்த சுற்றுகளின் வாக்கு நிலவரம் விரைவில் வெளியாகும் - மாவட்ட தேர்தல் அதிகாரி பேட்டி
x

அடுத்தடுத்த சுற்றுகளின் வாக்கு நிலவரம் விரைவில் வெளியாகும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி கூறினார்.

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 27 ஆம் தேதி நடைபெற்றது. இந்த வாக்குகளை எண்னும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இரண்டு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் எவ்வளவு வாக்குகளை பெற்றுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை, வாக்கு எண்ணும் மையத்திற்குள் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இதனால், செய்தியாளர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியாளருமான கிருண்னனுன்னி செய்தியாளர்களை சந்தித்து பேச்சுவர்த்தை நடத்தினார்.

அப்போது அவர் கூறுகையில்,

வாக்கு எண்ணிக்கை முடிவுகள் மைக்கில் அறிவிக்கப்படும். ஒவ்வொரு சுற்று முடிவிலும் வேட்பாளர்கள் எவ்வளவு வாக்குகள் பெற்றுள்ளனர் என்பது சரிபார்க்கப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படும். அடுத்தடுத்த சுற்றுகளின் வாக்கு நிலவரம் விரைவில் வெளியிடப்படும். குறிப்பிட்ட நேரத்தில் வெளியிட வேண்டும் என கட்டாயமில்லை. வெளிப்படைத்தன்மையுடனே வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story