குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்


குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
x

குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

தென்காசி

தென்காசி:

குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக குளுமையான சூழல் நிலவி வருகிறது. குளிர்ந்த காற்றுடன் சாரல் மழையும் அவ்வப்போது விட்டு விட்டு பெய்கிறது. இந்த நிலையில் நேற்று காலையில் இருந்தே குற்றாலம் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து வந்தது. இடையிடையே இதமான வெயிலும் அடித்தது. இங்கு உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி, புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தர்.

சுற்றுலா பயணிகள் கோரிக்கை

தற்போது மெயின் அருவி, ஐந்தருவி ஆகிய 2 இரண்டு அருவிகளிலும் மட்டும் 24 மணி நேரமும் குளிக்க அனுமதிக்கப்படுகிறது. பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் இரவில் குளிக்க அனுமதிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.



Next Story