விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

அரியலூர்

கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம், வைப்பம் கிராமத்தை சேர்ந்தவர் காசிநாதன்(வயது 52). கூலித் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று காலை மது குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றதாகவும், இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி அவரை திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த காசிநாதன் களைக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்து, வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story