மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்துதொழிலாளி பலி


மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்துதொழிலாளி பலி
x

பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.

பெரம்பலூர்

வீட்டிற்கு ஒரே மகன்

பெரம்பலூர் அருகே நொச்சியம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மனைவி அமுதா. இவர்களுக்கு விக்னேஷ்வர் (வயது 23) என்ற மகனும், விஸ்மிதா (20), சவுபாக்கியலட்சுமி (18) ஆகிய 2 மகள்களும் உள்ளனர். கருப்புசாமி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். விக்னேஷ்வர் கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வந்தார். இவர் நேற்று மதியம் அருகே செல்லியம்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டு விஷேசத்திற்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

வேகத்தடையில் ஏறி, இறங்கிய போது...

அப்போது செல்லியம்பாளையம்-நொச்சியம் சாலையில் பெருமாள் கோவில் அருகே வந்த போது வேகத்தடையில் ஏறி இறங்கிய போது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததில் விக்னேஷ்வர் படுகாயமடைந்தார். இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் வாகனம் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே விக்னேஷ்வர் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் விக்னேஷ்வர் உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனை பிரேத கூடத்தில் வைக்கப்பட்டது. அப்போது விக்னேஷ்வரின் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story