தொழிலாளிக்கு கத்திக்குத்து


தொழிலாளிக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 5 Sep 2023 6:45 PM GMT (Updated: 5 Sep 2023 6:45 PM GMT)

போடியில் தொழிலாளியை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

போடி குலாலர்பாளையம் போஜராஜ் தெருவை சேர்ந்தவர் பாண்டி (வயது 50). கூலித்தொழிலாளி. நேற்று இவர், தேவர் காலனியில் உள்ள டாஸ்மாக் கடை பகுதியில் தனது நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது போடி குலாலர்பாளையம் வாட்டர் டேங்க் பகுதியை சேர்ந்த மணி என்பவர் அங்கு வந்தார். அவர் திடீரென அங்கு நின்று கொண்டிருந்த பாண்டி மற்றும் அவரது நண்பர்களிடம் தகராறு செய்தார்.

இதனை பாண்டி தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த மணி பையில் வைத்திருந்த கத்தியை எடுத்து பாண்டியின் கழுத்தில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர் போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அவர் போடி நகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மணியை கைது செய்தனர்.


Related Tags :
Next Story