போக்சோவில் வாலிபர் கைது


போக்சோவில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 8 Nov 2022 6:45 PM GMT (Updated: 8 Nov 2022 6:45 PM GMT)

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தேனி

கம்பம் செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகேஷ் (வயது 27). இவர் 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அந்த சிறுமி கர்ப்பமானார். அவருக்கு கம்பம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீசாருக்கு டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர் திலகம் விசாரணை நடத்தினார். இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மகேசை கைது செய்தார்.


Next Story