தென் ஆப்ரிக்கா: காந்திசிலையை திறந்து வைத்தார் சுஷ்மா சுவராஜ்


தென் ஆப்ரிக்கா: காந்திசிலையை திறந்து வைத்தார் சுஷ்மா சுவராஜ்
x
தினத்தந்தி 8 Jun 2018 5:27 AM GMT (Updated: 8 Jun 2018 5:27 AM GMT)

தென் ஆப்ரிக்காவில் மார்பளவு காந்தி சிலையை சுஷ்மா சுவராஜ் திறந்து வைத்தார். #SushmaSwaraj #GandhiStatue

பீட்டர்மரிட்ஸ்பர்க்,

தென் ஆப்ரிக்காவின் பீட்டர்மரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மார்பளவு காந்தி சிலையை இந்தியாவின் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் திறந்து வைத்தார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் 10-வது உச்சிமாநாடு வரும் ஜூலை 25-ம் தேதி தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறத்துறை மந்திரிகளின் கூட்டம்  4-ந் தேதி  தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது.
இதில் பங்கேற்பதற்காக வெளியுறத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தென் ஆப்ரிக்காவுக்கு  சென்றிருக்கிறார்.

இந்நிலையில் தென் ஆப்ரிக்காவின் பீட்டர்மரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மார்பளவு காந்தி சிலையை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், திறந்து வைத்தார். பீட்டர்மரிட்ஸ்பர்க் நகரில் பணிபுரிந்து வந்த மகாத்மா காந்தியை, ஆங்கிலேயர்கள் ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவத்தின் 125 -வது ஆண்டு நினைவாக இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது.  

முன்னதாக பென்ட்ரிச் நகரத்தில் இருந்து, பீட்டர்மரிட்ஸ்பர்க் வரை, சுஷ்மா ஸ்வராஜ் ரயிலில் பயணம் செய்தார்.

Next Story