ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு: 5 பேர் பலி


ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு: 5 பேர் பலி
x
தினத்தந்தி 11 Jun 2018 9:55 AM GMT (Updated: 11 Jun 2018 9:55 AM GMT)

காபூலில் உள்ள அரசாங்க அலுவலத்தின் வெளியே நடந்த குண்டு வெடிப்பில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். #KabulMinistryBlast

காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூலில் அமைந்துள்ள அரசாங்க அலுவலகத்தின் வெளியே சக்தி வாய்ந்த குண்டு ஒன்று வெடித்துள்ளது. ரமலான் பண்டிகை வருவதையொட்டி பணியாளர்கள் அலுவலகத்தை விட்டு வெளியேறுகையில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த பயங்கர சம்பவத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

”அரசாங்க அலுவலத்தின் வெளிப்புற வாயிலில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்ததுள்ளது. இந்த பயங்கர சம்பவத்தில் 5 பேர் பலியாகியுள்ள நிலையில், மேலும் பலி எண்ணிக்கை கூடும் என அஞ்சப்படுகிறது. குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து உடனடியாக எந்த தகவலும் கிடைக்கவில்லை” என மத்திய கிராமப்புற புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி திட்ட செய்தி தொடர்பாளர் தாவூத் நைமி தெரிவித்துள்ளார்.

Next Story