புதிய பிஎம்டபிள்யூ காரை சவப்பெட்டியாக்கி தந்தையை அடக்கம் செய்த மகன்


புதிய பிஎம்டபிள்யூ காரை சவப்பெட்டியாக்கி தந்தையை அடக்கம் செய்த மகன்
x
தினத்தந்தி 13 Jun 2018 5:56 AM GMT (Updated: 13 Jun 2018 5:56 AM GMT)

இறந்த தந்தைக்காக புதிய பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்கி அதனை சவப்பெட்டியாக பயன்படுத்தி உடலை அடக்கம் செய்த மகன்.

நைஜீரிய நாட்டின் அனம்பரா மாகாணத்தில் உள்ள மொபோசி  பகுதியைச் சேர்ந்தவர் அசுபுயுகி இவர் அந்தப்பகுதியில் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவராவார். அண்மையில் அசுபுயுகியின் தந்தை மரணமடைந்ததைத் தொடர்ந்து, அவரது உடலை அடக்கம் செய்வதற்காக புதிய பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்கி அதனை சவப்பெட்டியாக பயன்படுத்தி அவரின் உடலை, பூமிக்குள் அடக்கம் செய்துள்ளது அந்தப்பகுதியினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அசுபுயுகியின் தந்தை அடக்கம் செய்யப் பயன்படுத்திய பிஎம்டபிள்யூ  காரின் மதிப்பு 66,000 டாலர் ( ரூ.66 லட்சம்) ஆகும். 

உடலை புதிய பிஎம்டபிள்யூ காரில் வைத்து அடக்கம் செய்ய வேண்டும் என்பது தனது ஆசை என அவர் முன்னரே கூறியிருந்ததாகவும், தனது தந்தையின் ஆசையை தான் நிறைவேற்றியிருப்பதாகவும் அசுபுயுகி கூறியுள்ளார்.விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ  கார் சவப்பெட்டியாக பயன்படுத்தப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story