ஈராக்கில் பிரதமர் உத்தரவினை அடுத்து 12 பேருக்கு உடனடியாக தூக்கு தண்டனை நிறைவேற்றம்


ஈராக்கில் பிரதமர் உத்தரவினை அடுத்து 12 பேருக்கு உடனடியாக தூக்கு தண்டனை நிறைவேற்றம்
x
தினத்தந்தி 29 Jun 2018 8:10 AM GMT (Updated: 29 Jun 2018 8:10 AM GMT)

ஈராக் நாட்டில் தீவிரவாத குற்றச்சாட்டிற்கு ஆளான 12 பேருக்கு உடனடியாக தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது.

பாக்தாத்,

ஈராக் நாட்டில் பாதுகாப்பு படையை சேர்ந்த 8 பேர் கடத்தப்பட்டு பின் கொல்லப்பட்டனர்.  இதுபற்றிய வழக்கில் 12 தீவிரவாதிகள் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அந்நாட்டின் பிரதமர் ஹைதர் அல் அபாடி குற்றவாளிகளுக்கு உடனடியாக மரண தண்டனையை நிறைவேற்றும்படி உத்தரவிட்டார்.

இதனை அடுத்து 12 பேரும் தூக்கில் இடப்பட்டு அவர்களது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது.


Next Story