சுற்றுலாப்பயணிகள் மீது பாய்ந்த சிங்கம்


சுற்றுலாப்பயணிகள் மீது பாய்ந்த சிங்கம்
x
தினத்தந்தி 7 Sep 2018 12:28 PM GMT (Updated: 7 Sep 2018 12:28 PM GMT)

உக்ரைன் நாட்டில் சிங்கம் ஒன்று திடீரென்று அங்கிருந்த சுற்றுலாப்பயணிகள் மீது பாய்ந்ததால், பீதியடைந்துள்ளனர்.


உக்ரைனில் உள்ள பிரபல டெய்கான் சபாரி பார்க்கில், சபாரி வாகனத்தில் சுற்றுலாப் பயணிகள் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு இருந்த சிங்கத்தை காண வாகனத்தை நிறுத்தியுள்ளனர். திடீரென்று எதிர்பாராத வகையில் சுற்றுலா பயணிகள் மீது சிங்கம் பாய்ந்தது. வாகனத்திற்குள் ஏறி குதித்து பயணிகள் மீது தாவியுள்ளது.

இதனால் பயணிகள் பீதியடைந்தனர். ஆனால் சிங்கமோ அவர்களை தாக்கவில்லை. அதிர்ஷ்டவசமாக காயம் ஏதுமின்றி பயணிகள் தப்பித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.மேலும் இது போன்ற சபாரி ரைடுகள் ஆபத்தானதாக பார்க்கப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன், சுற்றுலா பயணி ஒருவரின் கையை சிங்கம் கடித்து குதறிய சம்பவம் நடைப்பெற்றுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.



Next Story