அண்டார்டிகாவில் உலவிய டைனோசர்கள்!


அண்டார்டிகாவில் உலவிய டைனோசர்கள்!
x
தினத்தந்தி 15 Sep 2018 8:37 AM GMT (Updated: 15 Sep 2018 8:37 AM GMT)

அண்டார்டிகா என்றதுமே நமக்கு, எங்கும் நிறைந்து இருக்கும் பனிப்பாறைகள், எலும்பை ஊடுருவும் குளிர், அச்சமூட்டும் தனிமை ஆகியவைதான் நினைவுக்கு வரும்.

அண்டார்டிகா குறித்து நம் நினைவில் உள்ள சித்திரம் இதுதான். நமக்கு இவ்வாறுதான் கற்பிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், அண்டார்டிகாவில் டைனோசர்கள் வாழ்ந்து இருக்கின்றன என்றால் ஆச்சரியம்தானே?

இப்போது எங்கும் பனிக்கட்டி படர்ந்திருக்கும் அந்த நிலப்பரப்பு ஒரு காலத்தில் காடாக இருந்திருக்கிறது. அந்தக் காட்டில் டைனோசர்கள் உலவி இருக்கின்றன.

எப்படி இது சாத்தியம் என்று தோன்றுகிறதா? குளிர்ப்பிரதேசமாக அறியப்பட்ட ஒரு பகுதியில் எப்படி வெப்பமும், காடும் இருந்திருக்கும் என்று கேள்விகள் எழுகின்றனவா?

இதைப் புரிந்து கொள்ள நாம் நில வரலாற்றில் பின்னோக்கிப் பயணிக்க வேண்டும். சுமார் 145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கிரிட்டேசியஸ் காலம் எனப்படும் காலத்தில் அண்டார்டிகாவில் பனிக் கட்டிகள் எல்லாம் இல்லை.

அந்தக் காலத்தில்தான் அப்பகுதியில் டைனோசர்கள் வாழ்ந்து இருக்கின்றன. பின் ஒரு விண்கல் புவியை தாக்கியதில் அந்த இனமே அழிந்துபோய் இருக்கிறது.

அந்தச் சமயத்தில் நிலத்தின் இரு துருவங்களிலும் காடு இருந்திருக்கிறது. இப்போது அங்கிருந்து எடுக்கப்படும் படிமங்களைக் கொண்டு அந்தச் சமயத்தில் அந்நிலத்தில் எம்மாதிரியான காலநிலை இருந்திருக்கும் என்று அறிய முடிகிறது.

அங்கிருந்து எடுக்கப்பட்ட புதைபடிவ உயிரினங்களை ஆராய்ச்சி செய்து, அங்கு கிரிட்டேசியஸ் காலத்தில் எவ்வளவு வெப்பம் இருந்திருக்கும் என்று கணக்கிடுகின்றனர்.

இது சாதாரணமாக விவரிக்கப்பட்டாலும், உண்மையில் மிகப் பெரிய பணி ஆகும். அங்கு எடுக்கப்பட்ட புதைபடிவத்தின் ஓட்டின் வேதியியலை ஆராய வேண்டும். பல்வேறு காலநிலையும் வெப்பமும் அந்த ஓட்டில் ஆதிக்கம் செலுத்தி இருக் கும். இதனை ஆய்வு செய்து வெப்பத்தைக் கணக்கிடலாம்.

சுமித்சோனியன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத் தைச் சேர்ந்த ஆய்வாளர் பிரைன் ஹுபர், அண்டார்டி காவில் ஆழ்கடல் பகுதிகளை ஆய்வு செய்து வருகிறார். அவர், ‘இந்த நுண் புதைபடி வங்கள் முக்கிய தகவல்களை வழங்கி வருகின்றன’ என்கிறார்.

சரி... அண்டார்டிகாவில் இருந்த காடு என்ன ஆனது? அங்கிருந்த டைனோசர்கள் எங்கு சென்றன?

இதுகுறித்து பிரைன் ஹூபர், ‘கடற்பரப்பு விரிவடைந் ததால், எரிமலை வெடிப்புகள் அதிகரித்து கரியமில வாயுவை அதிகரித்து இருக்கி றது. இது பசுமைக் குடிலை உண்டாக்கி, அதன் காரண மாக இந்தப் புவி வெப்பமாகி இருக்கு மோ... அதனால் பூமியின் தன்மை மாறி இருக்குமோ என்ற கோணத்தில் ஆய்வு செய்து வருகிறோம்’ என்கிறார்.

பருவநிலை மாற்றம் குறித்து நாம் அறிவோம். அது கடந்த காலத்திலும் இருந்தது என்பதை அறிய முடிகிறது. இப்போது இருக்கிறது, எதிர்காலத்தி லும் இருக்கும். அப்படியானால், அண்டார்டிகா பனி எல்லாம் உருகி மீண்டும் காடுகள் உண்டாகுமா?

இக்கேள்விக்கு, ‘அதைக் கணிக்க முடியாது. நாம் சில பத்தாண்டுகளில் பில்லியன் டன் கணக்கில் கரியமில வாயுவை வெளியிட்டு வருகிறோம். கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக சில மாற்றங்கள் நிகழலாம்’ என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மீண்டும் அண்டார்டிகாவில் டைனோசர்கள் உலவுமா என்று கூற முடியாது. ஆனால், பனி இல்லாத பிரதேசமாக அப்பகுதி மாறலாம்.

உலகில் எதுவும் நடக்காது என்று கூற முடியாது! 

Next Story