கேமிராவில் சிக்கிய நீருக்கடியில் வாழும் "தலையில்லாத கோழி அசுரன்” புதிய உயிரினம்


கேமிராவில் சிக்கிய நீருக்கடியில் வாழும்  தலையில்லாத கோழி அசுரன்” புதிய உயிரினம்
x
தினத்தந்தி 23 Oct 2018 7:03 AM GMT (Updated: 23 Oct 2018 7:03 AM GMT)

பல வருடங்கள் கழித்து, ஆராய்ச்சியாளர்கள் இறுதியில் நீருக்கடியில் "தலையில்லாத கோழி அசுரன் " ஒன்று வாழ்ந்து வருவதை கேமரா மூலம் கணடறிந்து உள்ளனர்.

மிகப்பெரிய "தலையில்லாத கோழி அசுரன்" அல்லது ஐபிபியாஸ்டீஸ் எலிமியா எனப்படும் ஒர் உயிரினம், அண்மையில் தென்சீனக் கடலில் ஆஸ்திரேலிய மீன்வளர்ப்பு கேமராவில் முதல் முறையாக காணப்பட்டது என ஆஸ்திரேலியா அண்டார்டிகா  பிரிவு தெரிவித்து உள்ளது.

இந்த அரிதான நீருக்கடியில் வாழும் உயிரினம், ஒரு புல்வெளி போன்று சிவப்பு கலரில் ஒரு வலைப்பின்னல் போன்று தோன்றுகிறது, இது முன்பு மெக்சிக்கோ வளைகுடாவில் படமாக்கப்பட்டது.

தென்னிந்திய பெருங்கடலை நிர்வகிப்பதற்கான சர்வதேச  அண்டார்டிக் கடல் வாழ்க்கை வளங்களை கமிஷன்  (CCAMLR), இந்த காட்சியை படமாக்கி உள்ளது என ஆஸ்திரேலிய அன்டார்டிக் பிரிவு திட்டத் தலைவர் டிர்க் வெல்ஸ்போர்ட் கூறினார்.

கேமிராக்களில் இருந்து நாம் பார்க்கும் இந்த காட்சிகளானது, பிரகாசமாக இருக்கிறது, உலகின் எந்த பகுதியிலும் நாம் பார்த்திராத இனங்கள் ஆகும் என கூறினார்.

கடல்சார் வாழ்வின் நம்பத்தகுந்த தன்மை மற்றும் பல்வேறு வகை கடல்சார்  உயிரினங்கள்  தென்னிந்திய பெருங்கடலில் அமைந்துள்ளன. வணிக ரீதியாக தேடப்பட்ட இனங்கள், எதிர்கால தலைமுறைகளுக்கு கவனமாக கொண்டு சேர்க்கப்பட வேண்டும் என  வேண்டும். "  என கில்லியன் ஸ்லாக்கம், ஆண்டார்க்டிகா கடல் வாழ் உயிரின வளத்துறை ஆணைய பாதுகாப்புக்கான அமைப்பு தெரிவித்து உள்ளது.


Next Story