உலகைச் சுற்றி....


உலகைச் சுற்றி....
x
தினத்தந்தி 30 Oct 2018 11:00 PM GMT (Updated: 30 Oct 2018 5:10 PM GMT)

* இத்தாலி நாட்டில் கடும் புயல் தாக்கியது. புயல், மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி அங்கு 5 பேர் பலியாகினர்.

* வங்காளதேசத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை, அந்த நாட்டினர் 5 பேர் சட்டவிரோதமாக துபாய்க்கு அழைத்துச் சென்று, விபசாரத்தில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தியதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அவர்களுக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து துபாய் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

* துருக்கியில் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியை திருமணம் செய்யவிருந்த துருக்கி பெண் ஹேட்டிஸ் செங்கிஸ், லண்டனில் நடந்த இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், கசோக்கி படுகொலையை அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், பிற தலைவர்களும் சவுதி அரேபியா மூடி மறைத்து விடாதபடிக்கு பார்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

* மெக்சிகோவில் இருந்து அகதிகள் வந்துவிடாதபடிக்கு தடுப்பதற்காக, அந்த நாட்டின் எல்லைக்கு அமெரிக்கா 5 ஆயிரத்து 200 படை வீரர்களை அனுப்பி வைக்கிறது.

*பல்வேறு கிரிமினல் குற்றசாட்டுகளின் பேரில் 6 பேருக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தண்டிக்கப்பட்ட 6 பேரும்,  குற்றச்செயல் நடந்தபோது 18 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்துள்ளனர். எனவே அவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றக்கூடாது என ஐ.நா. சபையின் மனித உரிமை அமைப்பு வலியுறுத்தி உள்ளது.


Next Story