ஆப்கானிஸ்தான் : அமெரிக்கா வான் வழி தாக்குதலில் தலிபான் முக்கியத் தளபதி பலி


ஆப்கானிஸ்தான் : அமெரிக்கா வான் வழி தாக்குதலில் தலிபான் முக்கியத் தளபதி பலி
x
தினத்தந்தி 3 Dec 2018 7:21 AM GMT (Updated: 3 Dec 2018 7:21 AM GMT)

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் தலிபான்களின் முக்கியத் தளபதி பலியானதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காபூல்

ஆப்கானிஸ்தானின் தென் பகுதியில் உள்ள ஹெல்மாண்ட் மாகாணத்தில் தலிபான்கள் பதுங்கி  உள்ள பகுதிகளில் ஆப்கன் அரசு மற்றும் அமெரிக்கப் படைகள்   வான்வழி தாக்குதல் நடத்தியது.இந்த வான்வழித் தாக்குதலில் 29 தலிபான்கள் கொல்லப்பட்டனர். இதில் அப்துல் மனன் என்ற தலிபான் தளபதி கொல்லபட்டார்

இத்தகவலை ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டு உள்ளன. அப்துலின் மரணத்தை தலிபான்களும், அம்மாகாண ஆளுநரான முகமது யாசின் கானும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

எனினும் அப்துல் மனனின் மரணம் குறித்து அமெரிக்கா த்ரப்பில் இருந்து  இதுவரை அதிகாரபூர்வ தகவல் ஏதும் இதுவரை வெளிவரவில்லை.

Next Story