புதின் மீது கொலை முயற்சி; டிரம்புக்கு நோய் பிரபல பாபா வாங்காவின் 2019 ஆம் ஆண்டின் முக்கிய கணிப்புகள்


புதின் மீது கொலை முயற்சி; டிரம்புக்கு நோய் பிரபல பாபா வாங்காவின் 2019 ஆம் ஆண்டின் முக்கிய கணிப்புகள்
x
தினத்தந்தி 13 Dec 2018 11:51 AM GMT (Updated: 13 Dec 2018 12:21 PM GMT)

உலகில் நடக்கும் நிகழ்வுகளை முன்பே கணிக்ககூடிய பாபா வாங்கா அடுத்து வரும் 2019-ஆம் ஆண்டில் என்ன நடக்கும் என்பதை கணித்து கூறியிருப்பதில், சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல்கேரியன் நாட்டை சேர்ந்த பெண் பாபா வாங்கா. கண் தெரியாதவர் இவர் தனது 85 வயதில் 1996 ஆம் ஆண்டு காலமானார். இவர் அங்கு பல்கேரிய நாஸ்டர்டாமாக மதிக்கப்படுகிறார். இவர் 50 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு  தகவல்களை முன் கூட்டியே கணித்து கூறி உள்ளார். இவர் கூறியதில் 85 சதவீதத்திற்கு மேற்பட்டவை பலித்தும் உள்ளன நடந்தும் உள்ளன.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாஸ்டர்டாம்ஸ் உலகில் கி.பி.3797 வரை என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதைக் கூறியுள்ள அபூர்வ ஜோதிடர். சுமார் 3000 பலன்களை இவர் கூறியுள்ளதும் அவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து வருவதும் உலகில் உள்ள அனைவரையும் திகைக்க வைக்கிறது.

14-12-1503ல் பிறந்த இவர் 2-7-1566ல் மறைந்தார். இவர் வாழ்வு மிக விசித்திரமான ஒன்று. இவர் கூறிய பலன்கள் பெரும்பாலும் அழிவையும் விபத்துக்களையும் கொலைகளையும் சுட்டிக் காட்டுவதால் சிறிது பயத்துடன்தான் இந்த நூலை அணுக வேண்டியிருக்கிறது.

அதுபோல் தான் இந்த பெண் பாபா வாங்கா இவரது கணிப்புகளில் அதிகம் பலித்து உள்ளது

2016 ஆண்டு மிகப்பெரிய இஸ்லாமிய போர் தொடங்கும், ஐரோப்பியர்களுக்கு எதிராக இரசாயன ஆயுதத்தை பயன்படுத்துவர். அவர்கள்  2043 ஆம் ஆண்டு  ரோமை மைய புள்ளியாக கொண்டு தங்கள் இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவார்கள என கூறினார்.

2017-ம் ஆண்டிற்கு பின்னர் மூன்றாம் உலகப்போர் ஏற்படும் எனவும் பாபா வாங்கா கணித்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளுக்கு மத்தியில் பகைமை அதிகரித்து வருவதால் இது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்குமா? என்ற அச்சமும் பல நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் உள்ள வர்த்தக கோபுரங்கள் மீது விமான தாக்குதல் நடைபெறும் எனக் கூறினார். அதே போன்று அந்த தாக்குதல் நிகழ்ந்து உலகையே அதிர வைத்தது. அமெரிக்காவின் 44-வது ஜனாதிபதியாக ஒரு கருப்பினத்தவர் பதவி ஏற்பார் என்று கணித்தார். அதே போல், ஒபாமா ஜனாதிபதியாக பதவியேற்றார். பின்னர், 2016-ஆம் ஆண்டு ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் வலுமை பெறும் எனவும், ஐரோப்பாவில் இருந்து பிரித்தானியா விலகும் எனவும் கணித்தார். இதைத் தொடர்ந்து தன்னுடைய குடிமக்கள் மீது சிரியா ஜனாதிபதி ரசாயன தாக்குதலை நடத்துவார் என கணித்தார், அதுவும் நடந்தது.

இப்படி இவர் கூறும் விஷயங்களில் பல நடந்துள்ளதால், இவருடைய கணிப்பை பற்றி பலரும் எதிர்பார்க்கின்றனர். அந்த வகையில் தற்போது 2018-ஆம் ஆண்டு முடிந்து 2019-ஆம் ஆண்டு வரவுள்ளது. இதனால் அடுத்த 12 மாதங்கள் என்ன நடக்கும் என்பதில் பாபா வாங்கா என்ன கணித்துள்ளார் என்பதை பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது.



அதில் அவர் கூறி இருப்பதாவது:-

* அடுத்த ஆண்டு ஐரோப்பாவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும். 

*  ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் மீது படுகொலை முயற்சி ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இவர் குறிப்பிடுவதைப் போன்று சமீபத்தில் புதின் தனக்கென்று தனியாக பாதுகாப்பான படை வைத்துள்ளார் என்று செய்தி வெளியானது. ஆனால் அது குறித்து எந்த உறுதியான தகவலும் இல்லை. தற்போது பாபா வங்காவின் கணிப்பில் படுகொலை செய்யப்படலாம் என்று கூறப்படுவதால் அதற்காகத்தான் இந்த பாதுகாப்பா என்ற கேள்வி எழுந்துள்ளது.

* ஆசியாவில் மிகப்பெரிய சுனாமி ஏற்படுமாம். 2004-ஆம் ஆண்டு எப்படி ஒரு சுனாமி பாதிப்பு இருந்ததோ அதே போன்ற பாதிப்புகள் இருக்குமாம். இதைத் தொடர்ந்து ரஷ்யாவில் விண்கல் வந்து விழும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

* புதினோடு விடவில்லை, அவர் டிரம்பை பற்றி சொன்ன கணிப்பு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப் ஒரு மர்ம நோயால் பாதிக்கப்படுவார் என்று கணித்துள்ளார். அது செவிடாக இருக்கலாம் அல்லது மூளைக் காய்ச்சல் நோயாகவும் இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக பாபா வங்கா கணித்துள்ள கணிப்புகளில் அதிகம்  நடந்துள்ளதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் அவருடைய கணிப்புகள்

* 2025: உலகளாவிய பசி 2025-2028-க்குள் ஒழிக்கப்படும்.

* 2028 மனிதன் சுக்கிரன்  கிரகத்திற்கு பறப்பான். அங்கு புதிய எரிசக்தி ஆதாரங்களை கண்டறிவார்கள்.

*  2033 உலகில் துருவ பனிப் படலங்கள் உருகி நீரின் அளவு அதிகரிக்கும்.

* 2043  ஐரோப்பா  முழுவதும் இஸ்லாமிய அரசாக மாறும். ரோம் அவர்களின் தலைநகராகும்.

* 2072 மற்றும் 2086-க்கு இடையில் ஒரு வர்க்கமற்ற கம்யூனிச சமுதாயம் புதிய தன்மையை உருவாக்கும்.

* 2170 முதல் 2256 ஆம் ஆண்டுக்கு இடையில்  பூமியில் இருந்து சுதந்திரமாக பிரிந்து அணுசக்தியால் செவ்வாய் கிரகத்தில் காலனி அமைக்கப்படும்,  உலகில் கடலுக்கு அடியில் நகரங்கள் உருவாகும். வேற்று கிரகவாசிகளின் கண்டு பிடிப்புகள், அதிபயங்கரமான கண்டுபிடிப்புகள் நடக்கும்.

* 2262 ஆம் ஆண்டு மற்றும் 2304 ஆம் ஆண்டுகளுக்கு இடையில்  நமது கால பயணத்தில் விரிசல் ஏற்படும். பிரஞ்சு கொரில்லாக்கள் பிரான்சில் முஸ்லீம் அதிகாரிகளுடன் போரிடுவார்கள்.

* 2341 இல் இயற்கை மற்றும் மனிதனால் தொடர் பேரழிவுகள் ஏற்படும். பின்னர் நமது பூமி வசிக்க தகுதி அற்றதாக மாறி விடும். மனிதர்கள் நமது சூரியகுடும்பத்தின் மற்ற கிரகங்களை தேடி ஓடுவர்.

* 4302 முதல் 4674 தீய கோட்பாடுகள்  நடக்கும். மனிதர்களுக்கு இறப்பே கிடையாது, வேற்றுகிரகவாசிகள் உள்வாங்கப்படுவர். 34 ஆயிரம் கோடி மக்கள் கடவுளிடம் பேச  சிதறி ஓடுவார்கள்.

* 5070 ஆம் ஆண்டு பிரபஞ்சம் முடிவடையும்.

Next Story