அமெரிக்க கல்வித்துறையில் தலைவிரித்தாடும் லஞ்சம் - ஹாலிவுட் நடிகைகள் உள்பட 50 பேர் மீது வழக்கு


அமெரிக்க கல்வித்துறையில் தலைவிரித்தாடும் லஞ்சம் - ஹாலிவுட் நடிகைகள் உள்பட 50 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 13 March 2019 10:45 PM GMT (Updated: 13 March 2019 7:29 PM GMT)

அமெரிக்க கல்வித்துறையில் லஞ்ச ஊழல் தொடர்பாக, ஹாலிவுட் நடிகைகள் உள்பட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் டெக்சாஸ், தெற்கு கரோலினா, யாலே, ஸ்டான்போர்டு, ஜார்ஜ் டவுன் ஆகிய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான லஞ்ச ஊழல் புகார்கள் தலைவிரித்தாடுகின்றன. இந்த பல்கலைக்கழங்களில் தங்களது பிள்ளைகளை சேர்க்க ஹாலிவுட் நடிகைகள் உள்பட பல முக்கிய பிரபலங்கள் கோடிக்கணக்கிலான ரூபாயை லஞ்சமாக கொடுத்தது மத்திய புலனாய்வு அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

போலி சான்றிதழ்கள், பொய்யான மதிப்பெண்கள், மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர் நுழைவுத் தேர்வு எழுதுதல் போன்ற வழிகளில் மோசடிகள் நடைபெற்றிருப்பது தெரியவந்திருக்கிறது.

இது தொடர்பாக ஹாலிவுட் நடிகைகள் லோரி லவுக்ளின், பெலிசிட்டி ஹாப்மேன் ஆகிய 2 நடிகைகள் உள்பட 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story