உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 11 April 2019 11:00 PM GMT (Updated: 11 April 2019 5:28 PM GMT)

* இந்தோனேசியாவின் கலிமந்தன் மாகாணத்தில் கனமழை, வெள்ளத்தை தொடர்ந்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 5 பேர் உயிர் இழந்தனர்.

* ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் (மே) 18–ந் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் 6 பிரதமர்கள் மாறி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

* சீனாவின் ஹெனன் மாகாணத்தில் உள்ள கோங்கி மாவட்டத்தில் சரக்கு ரெயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர். 2 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. 

* ஆப்கானிஸ்தானின் குண்டுஸ் மாகாணத்தில் போலீஸ் சோதனை சாவடி மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அதனை தொடர்ந்து போலீசார் பதில் தாக்குதல் நடத்தினர். இருதரப்பு மோதலில் 8 போலீசாரும், 7 பயங்கரவாதிகளும் பலியாகினர்.

Next Story