உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 16 April 2019 10:30 PM GMT (Updated: 16 April 2019 7:35 PM GMT)

தென் கொரிய அதிபர் மூன் ஜே இன், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை 4-வது முறையாக சந்தித்து பேச விருப்பம் தெரிவித்துள்ளார்.


* ஜிம்பாப்வே நாட்டில் மாஸ்கோனலாந்த் மாகாணத்தில் ஒரு தேவாலயத்துக்கு வெளியே நின்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்துக்குள் லாரி புகுந்ததில் 13 பேர் பலியானார்கள்.

* ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் மாகாணத்தில் உள்ள காக்கர் என்ற கிராமத்தில் ராணுவவீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் 6 தலீபான் பயங்கரவாதிகள் பலியாகினர். மேலும் 9 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

* கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பென்டிக்டோன் நகரில் 5 கி.மீ. இடைவெளியில் 3 இடங்களில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

* தென் கொரிய அதிபர் மூன் ஜே இன், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை 4-வது முறையாக சந்தித்து பேச விருப்பம் தெரிவித்துள்ளார்.

* தாய்லாந்தில் சோங்கிரன் என்று அழைக்கப்படும் புத்தாண்டு கொண்டாடத்தின் போது, கடந்த 5 நாட்களில் நடந்த சாலை விபத்துகளில் 300 பேர் உயிர் இழந்ததாகவும், சுமார் 3 ஆயிரம் காயம் அடைந்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

* ஆப்கானிஸ்தானில் ஹெரட் மாகாணத்தில் இடைவிடாது கொட்டி தீர்த்த கனமழையால் அங்குள்ள பல்வேறு நகரங்கள் வெள்ளக்காடாகி உள்ளன. மழை, வெள்ளம் தொடர்பான விபத்துகளில் 5 பேர் பலியானதாகவும், 17 பேர் மாயமாகி இருப்பதாகவும் தெரிகிறது.


Next Story