சிறுமி கற்பழிப்பு வழக்கு இந்தியரை நாடு கடத்திய அமெரிக்கா


சிறுமி கற்பழிப்பு வழக்கு இந்தியரை நாடு கடத்திய அமெரிக்கா
x
தினத்தந்தி 9 July 2019 9:30 PM GMT (Updated: 9 July 2019 7:03 PM GMT)

இந்தியாவை சேர்ந்தவர் தல்வார். இவர் சட்டப்பூர்வ அனுமதியுடன் அமெரிக்காவுக்கு சென்று இருந்தார்.

நியூயார்க்,

இந்த நிலையில் அவர் ஒரு சிறுமியை கற்பழித்த வழக்கில் ஜெர்மனி நாட்டு போலீசாரால் தேடப்படுபவர் என்ற விவரம் அமெரிக்காவுக்கு தெரியவந்தது.

இதையடுத்து ரிச்மாண்ட் ஹில் பகுதியில் அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அக்டோபர் மாதம் 6-ந் தேதி வரை அமெரிக்காவில் தங்குவதற்கான விசா அவரிடம் இருந்தது. அதனை ரத்து செய்த அதிகாரிகள் தல்வாரை காவலில் வைத்தனர். பின்னர் அமெரிக்கா-ஜெர்மனி கூட்டு ஒப்பந்தத்தின்படி தல்வாரை நாடு கடத்தி, ஜெர்மனி அதிகாரிகளிடம் அமெரிக்கா ஒப்படைத்தது.

Next Story