துருக்கியின் பொருளாதாரத்தை அழித்து விடுவதாக டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை
சிரியா மீதான தாக்குதல் தொடர்பாக துருக்கியின் பொருளாதாரத்தை முற்றிலும் அழித்து விடுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரித்து உள்ளார்.
வாஷிங்டன்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நேட்டோ நட்பு நாடு துருக்கிக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
சிரியாவில் இஸ்லாமிய அரசை (ஐஎஸ் அமைப்பு) தோற்கடிப்பதில் குர்திஷ் படைகள் அமெரிக்காவுக்கு முக்கிய உதவி செய்து வந்தன. இந்த நிலையில் வடகிழக்கு சிரியாவிலிருந்து அமெரிக்கப் படைகளை வெளியேற்ற அமெரிக்க ஜனாதிபதி முடிவெடுத்தார். ஆச்சரியமான இந்த முடிவுக்கு பின்னர் துருக்கி "வரம்பை மீறினால்" துருக்கியின் பொருளாதாரத்தை அழிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.
படையை திரும்பப் பெறுவது குறித்து டிரம்பின் முடிவு அவரது குடியரசுக் கட்சி கூட்டாளிகளால் கூட கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
சிரியா முழுவதும் அமெரிக்காவின் சுமார் 1,000 வீரர்கள் உள்ளனர். எல்லைப் பகுதியிலிருந்து சுமார் இரண்டு டஜன் பேர் வெளியேற்றப்பட்டனர்.
இந்த படையை திரும்பப் பெறும் முடிவு குறித்து முக்கிய குர்திஷ் படை தலைமை "முதுகில் குத்து உள்ளதாக " கூறியது. மேலும் இது ஒரு ஐஎஸ் அமைப்பின் எழுச்சிக்கு வழிவகுக்கும் என்றும் குர்திஷ் படைகள் துருக்கியின் தாக்குதல் அபாயத்திற்கு விடக்கூடும் என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
துருக்கி குர்திஷ் படையினரை பயங்கரவாதிகள் என்று கருதுகிறது. இதனால் அவர்கள் மீது தாக்குதல் நடத்த தயாராகி
வருகிறது.
துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன், எல்லைப் பகுதியில் குர்திஷ் போராளிகளை எதிர்த்துப் போராடுவதும், தற்போது துருக்கியில் வசித்து வரும் 3.6 மில்லியனுக்கும் அதிகமான சிரிய அகதிகளில் இரண்டு மில்லியனுக்கும் ஒரு "பாதுகாப்பான மண்டலம்" அமைப்பதும் தனது நோக்கம் என்று கூறியுள்ளார்.
ஆனால் டிரம்ப் இது குறித்து தெரிவிக்கும் போது துருக்கி தனது முடிவை சாதகமாக பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரித்தார் - இது பென்டகன் மற்றும் வெளியுறவுத்துறையின் மூத்த அதிகாரிகளின் ஆலோசனைக்கு எத்ரானது அதன் பொருளாதாரத்தை "அழிக்கவும் அழிக்கவும்" முடியும் என்று கூறினார்.
இது குறித்து டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-
நான் முன்பு கடுமையாக கூறியது போல, மீண்டும் வலியுறுத்துகிறேன். துருக்கியின் பொருளாதாரத்தை நான் முற்றிலுமாக அழிப்பேன் (நான் இதற்கு முன்பு செய்தேன்!) .அவர்கள், ஐரோப்பா மற்றும் பிறரை கவனிக்க வேண்டும் ...என கூறி உள்ளார்.
பின்னர் வெள்ளை மாளிகையில் இருந்து டிரம்ப், சிரியாவில் "மனிதாபிமானமற்ற" முறையில் செயல்பட்டால் துருக்கி "மிகவும் மோசமான பொருளாதார கோபத்தை" அனுபவிக்கக்கூடும் என்று ஒரு தொலைபேசி மூலம் துருக்கி ஜனாதிபதி தயிப் எர்டோகனிடம் பேசி உள்ளார்.
கடந்த ஆண்டு, துருக்கி - அமெரிக்கா இரண்டு நாடுகளுக்கிடையேயான உறவுகள் மோசமடைந்ததால், சில துருக்கிய தயாரிப்புகளுக்கு அமெரிக்கா வரியை உயர்த்தியது மேலும் உயர் அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது.
Related Tags :
Next Story