லண்டன் ஜெயிலில் உள்ள நிரவ் மோடி காவல் நீட்டிப்பு


லண்டன் ஜெயிலில் உள்ள நிரவ் மோடி காவல் நீட்டிப்பு
x
தினத்தந்தி 17 Oct 2019 11:00 PM GMT (Updated: 17 Oct 2019 6:46 PM GMT)

பஞ்சாப் நேஷனல் வங்கியை ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி, லண்டனுக்கு தப்பிச் சென்றார்.

லண்டன், 

இந்தியா விடுத்த வேண்டுகோளின் பேரில், கடந்த மார்ச் மாதம் அவரை ஸ்காட்லாந்துயார்டு போலீசார் கைது செய்தனர். லண்டன் ஜெயிலில் நிரவ் மோடி அடைக்கப்பட்டுள்ளார்.

அவரது காவல் முடிந்தநிலையில், காணொலி காட்சி மூலம் நேற்று அவர் ஆஜர்படுத்தப்பட்டார். நவம்பர் 11-ந் தேதிவரை அவரது காவலை நீட்டித்து வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டு நீதிபதி நினா டெம்பியா உத்தரவிட்டார். நிரவ் மோடியை நாடு கடத்தக்கோரும் வழக்கு விசாரணை, அடுத்த ஆண்டு மே 11-ந் தேதி தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

Next Story