மொராக்கோ நாட்டில் 300 கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கிய அரசர்


மொராக்கோ நாட்டில் 300 கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கிய அரசர்
x
தினத்தந்தி 10 Nov 2019 2:12 AM GMT (Updated: 10 Nov 2019 2:12 AM GMT)

முகமது நபி பிறந்த நாளை முன்னிட்டு 300 கைதிகளுக்கு மொராக்கோ நாட்டு அரசர் மன்னிப்பு வழங்கினார்.

ரபத்,

மொராக்கோ நாட்டில் அரசர் 6ம் முகமது ஆட்சி செய்து வருகிறார்.  இஸ்லாம் மத தூதரான முகமது நபியின் பிறந்த நாள் அல்-மாவ்லித் அல்-நபாவி அல்லது அல்-மாவ்லித் என்ற பெயரில் அந்நாட்டில் இன்று கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு 300 கைதிகளுக்கு அரசர் முகமது மன்னிப்பு வழங்கி உள்ளார்.  அவர்களில் சிலர் சிறையிலும் மற்றும் சிலர் ஜாமீனிலும் உள்ளனர்.


Next Story