விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு: கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் பலி
விருந்து நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டினால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் பலியாகினர்.
ஸா பாலோ,
பிரேசில் நாட்டின் ஸா பாலோ பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற குற்றவாளிகள் இருவரை போலீசார் விரட்டி சென்றனர். அப்போது அந்த பகுதியில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்று கொண்டு இருந்தது. அதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கூடி இருந்தனர். குற்றவாளிகள் கூட்டத்திற்குள் புகுந்து விட்டனர். குற்றவாளிகள் கூட்டத்தில் இருந்தவாறு போலீசாரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இதனால் விருந்தில் பங்கேற்றிருந்த பொதுமக்கள் அச்சமடைந்து, அலறியடித்து ஓடியதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story