தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு பளார் அறை விட்ட பாகிஸ்தான் அமைச்சர்


தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு பளார் அறை விட்ட பாகிஸ்தான் அமைச்சர்
x
தினத்தந்தி 7 Jan 2020 8:14 AM GMT (Updated: 7 Jan 2020 8:14 AM GMT)

டிக் டாக் பெண் பிரபலத்துடன் தன்னை தொடர்புபடுத்தி பேசிய தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரை பாகிஸ்தான் அமைச்சர் பவாத் சவுத்ரி கன்னத்தில் அறைந்துள்ளார்.

இஸ்லாமாபாத்

பாகிஸ்தானை சேர்ந்த ஹரீம் ஷா என்ற இளம்பெண், டிக் டாக்கில் அடிக்கடி வீடியோ வெளியிட்டு அந்நாட்டு மக்களிடையே மிகவும் பிரபலமாக திகழ்கிறார். அவருடன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பவாத் சவுத்ரியை தொடர்புபடுத்தி நிகழ்ச்சி தொகுப்பாளர் முபாசிர் லூக்மேன் என்பவர் பேசியிருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் சவுத்ரி, பஞ்சாப் மாகாண அமைச்சர் ஒருவரின் மகனுடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த முபாசிரை கன்னத்தில் அறைந்தார். தனிப்பட்ட முறையில் விமர்சித்ததற்காக அவரை அறைந்ததாக சவுத்ரி ஒப்புக் கொண்டார்.

Next Story