போர்ட்டோ ரிக்கோ கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இன்று அதிகாலை போர்ட்டோ ரிக்கோவில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று யு.எஸ். புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்
அமெரிக்க புவியியல் ஆய்வு போர்ட்டோ ரிக்கோ கடற்கரையில் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டு உள்ளதாகவும் அது 6.5 ரிக்டர் அளவுகோலில் பதிவானதாகவும் கூறி உள்ளது. இந்த நிலநடுக்கம் தீவின் தெற்கு கடற்கரையில் உள்ள தல்லபோவா நகருக்கு அருகில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்று தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story