ஸ்பெயினில் ருசிகரம்: கொரோனா பீதியில் இருக்கும் மக்களை பாட்டு பாடி உற்சாகப்படுத்திய போலீசார்


ஸ்பெயினில் ருசிகரம்: கொரோனா பீதியில் இருக்கும் மக்களை பாட்டு பாடி உற்சாகப்படுத்திய போலீசார்
x
தினத்தந்தி 24 March 2020 11:21 PM GMT (Updated: 24 March 2020 11:21 PM GMT)

ஸ்பெயினில் கொரோனா பீதியில் இருக்கும் மக்களை, போலீசார் பாட்டு பாடி உற்சாகப்படுத்திய ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மாட்ரிட்,

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசால் ஐரோப்பிய நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன.

அந்த வகையில் ஐரோப்பிய நாடானா ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தனது கோரப்பிடியை இறுக்கி வருகிறது. அங்கு கொரோனா வைரசால் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில் சுமார் 33 ஆயிரம் பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

இந்த நிலையில் அங்குள்ள மல்லோரியா தீவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் மக்களை உற்சாகப்படுத்தும் விதமாக பாடல்கள் பாடி, இசைக்கருவிகளை இசைத்து மகிழ்வித்தனர்.

போலீசார் பாட்டு பாடுவதை கேட்டு வீடுகளில் இருந்த மக்கள் வாசலுக்கு வந்தும் வீட்டின் மாடிகளில் நின்றும் கைத்தட்டி போலீசாருடன் இணைந்து பாடல்களை பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


Next Story