விஜய் மல்லையாவின் மேல் முறையீட்டு மனுவை நிராகரித்தது இங்கிலாந்து உயர் நீதிமன்றம்


விஜய் மல்லையாவின் மேல் முறையீட்டு மனுவை நிராகரித்தது இங்கிலாந்து உயர் நீதிமன்றம்
x
தினத்தந்தி 20 April 2020 11:03 AM GMT (Updated: 20 April 2020 11:17 AM GMT)

நாடு கடத்துவதை எதிர்த்த விஜய் மல்லையாவின் மேல் முறையீட்டு இங்கிலாந்து உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

லண்டன்,

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன அதிபர் விஜய் மல்லையா மீது ரூ.9,000 கோடி வங்கி மோசடி செய்ததாக சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்தன. இதற்கிடையே, வழக்கு விசாரணைகளில் இருது தப்பிப்பதற்காக  விஜய் மல்லையா இங்கிலாந்துக்கு தப்பி ஓடினார். 

இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்துள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று இந்தியா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. லண்டன் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த வழக்கில் விஜய் மல்லையா ஜாமீன் பெற்றதுடன், இந்த உத்தரவை எதிர்த்து லண்டன் ஐகோர்ட்டிலும் மேல் முறையீடு செய்தார்.

கடந்த சில மாதங்களாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த  இங்கிலாந்து உயர் நீதிமன்றம், விஜய் மல்லையாவின் மேல் முறையீட்டு மனுவை நிராகரித்தது. விஜய் மல்லையாவுக்கு எதிரான வழக்கில் முகாந்திரம் இருப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


Next Story