அமெரிக்காவில் புதிதாக 20,634 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


அமெரிக்காவில் புதிதாக 20,634 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 25 May 2020 1:06 PM GMT (Updated: 25 May 2020 1:06 PM GMT)

அமெரிக்காவில் ஒரே நாளில் புதிதாக 20,634 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வாஷிங்டன், 

சீனாவின் உகான் நகரில் உருவாகிய கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவில் ஏற்படுத்திய பாதிப்பை விட ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் தான் கொரோனா வைரஸ் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

உலக அளவில் கொரோனா தொற்று இறப்பு விகிதத்தில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 20,634 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது 16,86,765 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு நேற்று ஒரே நாளில் 633 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 99,304 ஆக அதிகரித்துள்ளது. 

Next Story