கொரோனா வைரஸ்: பிரேசில் இந்த வாரத்தில் நான்காவது முறையாக 1,000 இறப்புகளைப் பதிவு செய்தது


கொரோனா வைரஸ்: பிரேசில் இந்த வாரத்தில் நான்காவது முறையாக 1,000 இறப்புகளைப் பதிவு செய்தது
x
தினத்தந்தி 27 May 2020 5:43 AM GMT (Updated: 27 May 2020 5:43 AM GMT)

கொரோனா வைரஸ்: பிரேசில் இந்த வாரத்தில் நான்காவது முறையாக 1,000 இறப்புகளைப் பதிவு செய்து உள்ளது. அங்கு மொத்தம் இறப்பு எண்ணிக்கை 24,512 ஆக உள்ளது.

பிரேசில்யா

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிரேசில் நாட்டில் கடந்த  24 மணி நேரத்தில் 1,039 பேர் இறந்து உள்ளனர். வைரஸின் விரைவான பரவலுக்குப் பின்னர் தென் அமெரிக்க நாட்டில் தினசரி இறப்பு எண்ணிக்கை 1,000 ஐத் தாண்டியது  வாரத்தில் இது நான்காவது முறையாகும்.

பிரேசில் வைரஸின் புதிய மையமாக மாறியுள்ளது. சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, பிரேசிலில் இறப்பு எண்ணிக்கை 24,512 ஆக உயர்ந்துள்ளது.

சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, இறப்பு எண்ணிக்கை அநேகமாக அதிகமாக இருக்கலாம், ஆனால் சோதனையின் காரணமாக, பல பாதிப்புகள் கவனிக்கப்படாமல் போகின்றன.

பிரேசில் நாட்டின் 21 கோடி மக்கள் தொகையில் 3,91,222 தொற்றுநோய்களைப் பதிவு செய்துள்ளது. பிரேசில் அமெரிக்காவை அடுத்து பாதிப்பில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

தினசரி இறப்பு எண்ணிக்கையைப் பொறுத்தவரை நாடு அதிகாரப்பூர்வமாக அமெரிக்காவை விட அதிகம். பிரேசில் ஜனாதிபதி போல்சனாரோ நாட்டில் ஜிம்கள் மற்றும் நீச்சல் குளங்களைத் திறக்க உத்தரவிட்டு உள்ளார்.

போல்சனாரோ மே 24 அன்று ஒரு ஊரடங்கு எதிர்ப்பு பேரணியை நடத்தினார், இது பிரேசில் அரசாங்கத்தால் நடத்தப்பட்டது.


Next Story