பாரீசில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓரினச்சேர்க்கையாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓரினச்சேர்க்கையாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
பாரீஸ்
பிரான்சில் கொரோனா அச்சம் காரணமாக ஓரினச்சேர்க்கையாளர்ககின் நடைபயணம் நிகழ்ச்சிக்கு அரசு அனுமதி மறுத்து உள்ளது. இதை தொடர்ந்து அந்த நடைபயணத்தை நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைத்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று சனிக்கிழமை 3,000க்கும் மேற்பட்ட ஓரினச்சேர்க்கையாளர் பாரீசில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வன்முறைச் சம்பவங்கள் ஏதுமின்றி தங்களது கோரிக்கைகளையும், கோபத்தினையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.
2020-ஆம் ஆண்டு ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு இது 50-வது ஆண்டு கொண்டாட்டம் ஆகும். ஆனால் இம்முறை உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா வைரஸ் காரணமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story