இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லக்கா கூட்டாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
அங்கொட லொக்காவின் கூட்டாளியான அசித்த ஹேமதிலக்க இலங்கை போலீசார் நடத்திய என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
கொழும்பு,
அங்கொட லொக்காவின் கூட்டாளியான அசித்த ஹேமதிலக்க இலங்கை போலீசார் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இலங்கையின் முல்லேரியாவில் அசித்த ஹேமதிலக்கவை போலீசார் சுற்றிவளைத்த நிலையில், போலீசார் மீது கையெறி குண்டுகளை ஹேமதிலக்க வீசியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஹேம திலக்க சுட்டுக்கொல்லப்பட்டார். போதைப்பொருள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ‘சோல்ட்டா’ என்று அறியப்படும் அசித்த ஹேமதிலக அண்மையில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார்.
Related Tags :
Next Story