அடுத்த 4 ஆண்டுக்கும் தாமே அதிபர் - டிரம்ப் பேச்சு


அடுத்த 4 ஆண்டுக்கும் தாமே அதிபர் - டிரம்ப் பேச்சு
x
தினத்தந்தி 24 Aug 2020 6:07 PM GMT (Updated: 24 Aug 2020 6:07 PM GMT)

அமெரிக்காவிற்கு அடுத்த 4 ஆண்டுக்கும் தாமே அதிபர் என்று டிரம்ப் கூறினார்.

நியூயார்க்,

நவம்பர் மாதம் 3ம் தேதி நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் 2வது முறையாக அதிபர் பதவியை கைப்பற்றும் நோக்கத்துடன் டிரம்ப் அமெரிக்காவில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு உள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது தம்மை எதிர்த்து களம் இறங்கி உள்ள ஜனநாயக கட்சி ஜோ பிடனை அவர் கடுமையாக விமர்சித்து வருகிறார், எனக்கு அவர் போட்டியாளர் அல்ல என்று கூறும் டிரம்ப் , ஜோ பிடம் தமக்கு தாமே ஒரு எதிரி என்றார். உலகை காப்பாற்ற துடிக்கும் ஜோ பிடன் அமெரிக்காவை காப்பாற்ற முன்வரவில்லை என்று விமர்சித்தார்.

சீனாவை ஒரு எதிரியாக கூட அவரால் சிந்திக்க முடியவில்லை என்றும் டிரம்ப் கூறினார், ஜோ பிடனை கோபக்காரர் என்று வர்ணித்த டிரம்ப் நாளாக நாளாக அவரது கோபம்  அதிகரித்து உள்ளதாகவும் குறிப்பிட்டார். கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஒரு வீரரான ஜோ பிடன் தாம் எங்கு இருக்கிறோம் என்று கூட அறியாதவர் என டிரம்ப் சாடினார். அடுத்த 4 ஆண்டுக்கும் தாமே அதிபராக வர இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Next Story