கடந்த 3 வாரங்களில் 9 ஆஸ்திரேலிய ராணுவத்தினர் தொடர்ச்சியாக தற்கொலை காரணம் என்ன...?


கடந்த 3 வாரங்களில் 9 ஆஸ்திரேலிய ராணுவத்தினர் தொடர்ச்சியாக தற்கொலை காரணம் என்ன...?
x
தினத்தந்தி 24 Nov 2020 4:03 PM GMT (Updated: 24 Nov 2020 4:03 PM GMT)

கடந்த 3 வாரங்களில் 9 ஆஸ்திரேலிய ராணுவத்தினர் தொடர்ச்சியாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

சிட்னி

ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலிய ராணுவம் போர் குற்றத்தில் ஈடுபட்டதாக வெளியான பரபரப்பு அறிக்கைக்கு பின்னர் ராணுவ வீரர்களின் தற்கொலை அதிகரித்து வருகிறது.ஆப்கானிஸ்தானில் சில ஆஸ்திரேலிய வீரர்கள் நிராயுதபாணியான ஆண்களையும் குழந்தைகளையும் கொன்றதாக இரகசிய ஆவணங்கள் அம்பலப்படுத்தின.

இந்த விவகாரம் தொடர்பாக தற்போது  ஆஸ்திரேலிய அரசு விசாரணை நடத்த  முடி வெடுத்து உள்ளது .இந்த நிலையிலேயே, கடந்த 3 வாரங்களில்  9 ஆஸ்திரேலிய ராணுவத்தினர் வரிசையாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

மேலும், ஆஸ்திரேலிய படைகள் நிராயுதபாணியான ஆண்களையும் குழந்தைகளையும் கொல்லும் காட்சிகள் அடங்கிய ஆவணங்கள் வெளியாகி ஆஸ்திரேலியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே இந்த தகவலும் வெளியாகியுள்ளது.ஆஸ்திரேலிய படைகள் ஆப்கானிஸ்தானில் சுமார் 39 கைதிகள் மற்றும் அப்பாவி மக்களை கொன்றிருக்கலாம் என தெரிய வந்துள்ளது.இங்த விவகாரம் தொடர்பாக மொத்தம் 465 பக்கங்கள் கொண்ட விரிவான அறிக்கை வெளியாகியுள்ளது.

நான்கு ஆண்டுகள் நீண்ட விரிவான விசாரணை மற்றும் ஆய்வுகளுக்கு பின்னரே, 2005 முதல் 2016 வரையான காலகட்டத்தில் ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலிய படைகளின் இந்த கொடூர செயல்பாடு குறித்த அறிக்கை வெளியாகியுள்ளதுஇருப்பினும், தற்போது தற்கொலை செய்து கொண்ட ராணுவத்தினருக்கும் ஆப்கானிஸ்தானில் போர் குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதில் உறுதியான தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story