இங்கிலாந்தில் புதிதாக 10,641 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 178 பேர் பலி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 22 Feb 2021 6:21 PM GMT (Updated: 22 Feb 2021 6:21 PM GMT)

இங்கிலாந்தில் புதிதாக 10,641 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

லண்டன்,

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. இதுவரை 11.21 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 24.80 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இங்கிலாந்தில் தகவமைத்துக்கொண்ட புதிய வகை கொரோனா வைரசால் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று அங்கு அதிகரித்து வந்தநிலையில், தற்போது வைரஸ் பாதிப்பு சற்று குறைய தொடங்கி உள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது இங்கிலாந்து 5-வது இடத்தில் உள்ளது.
 
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10,641 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இங்கிலாந்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 41,26,150 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு ஒரேநாளில் மேலும் 178 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 20 ஆயிரத்து 757 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 25,48,621 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால தற்போது 14,56,772 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இங்கிலாந்தில் இதுவரை 17.7 மில்லியன் மக்கள், கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Next Story