கினியாவில் ராணுவ தளத்தில் குண்டுவெடிப்பு; 17 பேர் உயிரிழப்பு
கினியா நாட்டில் ராணுவ தளத்தில் ஏற்பட்ட தொடர்ச்சியான குண்டுவெடிப்பு சம்பவங்களில் 17 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
மலாபோ,
கினியாவில் பேட்டா என்ற பகுதியில் அமைந்த ராணுவ தளமொன்றில் டைனமைட் என்ற வெடிபொருள் திடீரென தொடர்ச்சியாக வெடித்துள்ளது. சக்தி வாய்ந்த இந்த குண்டுவெடிப்பில் சிக்கி 17 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
இதுவரை 420 பேர் காயமடைந்து உள்ளனர் என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. டைனமைட் வெடிபொருளை பயன்படுத்தும்பொழுது பாதுகாப்பு விசயங்களை கவனத்தில் கொள்ளவில்லை என கினியா அதிபர் டியோடோரா ஓபியாங் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story