நேபாளம்: கொரோனா பாதிப்பில் புதிய உச்சம்


நேபாளம்: கொரோனா பாதிப்பில் புதிய உச்சம்
x
தினத்தந்தி 3 May 2021 2:10 AM GMT (Updated: 3 May 2021 2:10 AM GMT)

நேபாளத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவு புதிய உச்சம் தொட்டுள்ளது.

காத்மாண்டு,

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத்  தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில் 7 ஆயிரத்து 137- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய நேற்று  16,147 பேருக்கு சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 

தொற்று பாதிப்புடன் 48,711- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து 1,612- பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்று பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 67- பேரும், இதுவரை 3,325- பேரும் உயிரிழந்துள்ளனர்.  

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் தீவிரமாக உள்ளதால், இந்தியாவுடனான 22 எல்லை முனைகளை மூடுவதாக நேபாள அரசு அண்மையில் அறிவித்தது.  இந்தியா - நேபாளம் இடையே 13 எல்லை முனைகளில் மட்டுமே தற்போது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. 


Next Story