பிரபல ‘பாப்’ பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் கோர்ட்டில் ஆஜர்


பிரபல ‘பாப்’ பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் கோர்ட்டில் ஆஜர்
x
தினத்தந்தி 16 July 2021 12:54 AM GMT (Updated: 16 July 2021 12:54 AM GMT)

பிரபல ‘பாப்’ பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் கோர்ட்டில் ஆஜரானார்.

லாஸ் ஏஞ்சல்ஸ், 

உலகப்புகழ் பெற்றவர் ‘பாப்’ பாடகி, பிரிட்னி ஸ்பியர்ஸ். இவர் விவாகரத்து செய்த பின்னர், 2008-ம் ஆண்டு முதல் தனது தந்தையின் பாதுகாப்பில் இருந்து வருகிறார்.

இதில் இருந்து வெளியேறி தற்போது தான் காதலித்து வரும் ஈரானில் பிறந்த சாம் அஸ்காரியை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். இதற்காக தந்தையின் பாதுகாப்பில் இருந்து வெளியேறுவதற்கு அனுமதி கேட்டு லாஸ் எஞ்சல்ஸ் கோர்ட்டில் பிரிட்னி ஸ்பியர்ஸ் வழக்கு தொடுத்துள்ளார்.

இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

அப்போது பிரிட்னி ஸ்பியர்ஸ், “நான் என் தந்தை மீதான குற்றச்சாட்டுகளை மீண்டும் கூறத்தான் இங்கே வந்துள்ளேன். என் வாழ்க்கையை எனது தந்தை அழிப்பதை நீங்கள் அனுமதிக்கிறீர்கள். என்னை என் தந்தை ஜேமி ஸ்பியர்ஸ் பாதுகாப்பில் இருந்து விடுவிக்க வேண்டும்” என்று உணர்ச்சிமயமாக நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார். அதைக் கேட்டுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கில் சொந்தமாக ஒரு வக்கீலை வைத்துக்கொள்ள பிரிட்னி ஸ்பியர்சுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

கோர்ட்டுக்கு வெளியே பிரிட்னி ஸ்பியர்ஸ் ரசிகர்கள் பெருந்திரளாக கூடி இருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Next Story