இங்கிலாந்து சுகாதாரத்துறை மந்திரிக்கு கொரோனா தொற்று
கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக்கொண்ட இங்கிலாந்து சுகாதாரத்துறை மந்திரி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
லண்டன்,
இங்கிலாந்து சுகாதாரத்துறை மந்திரி சாஜித் ஜாவித் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். லேசான அறிகுறிகளுடன் தொற்று பாதித்துள்ள அவர், வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். கொரோனா தடுப்பூசிகளின் இரு டோஸ்களையும் சாஜித் ஜாவித் போட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளிக்கிழமை தான், பிரதமர் போரிஸ் ஜான்சன் இல்லத்திற்கு ஜாவித் சென்றதாக கூறப்படுகிறது. எனினும், பிரதமர் போரிஸ் ஜான்சனை நேரடியாக ஜாவித் சந்தித்தாரா என்பது பற்று அவரது செய்தி தொடர்பாளர் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
கொரோனா கட்டுப்பாடுகளை வரும் திங்கள்கிழமை முதல் தளர்த்த இங்கிலாந்து அரசு தயாராகி வருகிறது. இங்கிலாந்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உச்சம் பெற்றுள்ள நிலையில், கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு மருத்துவ நிபுணர்கள் தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. எனினும், இதையும் மீறி கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு இங்கிலாந்து அரசு தயாராகி வருகிறது.
Related Tags :
Next Story