ஒலிம்பிக்கை மிரட்டும் கொரோனா ; டோக்கியோவில் ஒரே நாளில் 3,177 பேர் பாதிப்பு
ஒலிம்பிக் போட்டி நடைபெறும் டோக்கியோவில் அதிகரித்து வரும் கொரோனா பதிப்பு ஒரே நாளில் 3,177 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
டோக்கியோ
கொரோனா காலகட்டத்தில் முக்கிய விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. டோக்கியோ நகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்கு அவசரகால நிலைமை அமல்படுத்தப்பட்டு உள்ளது.
டோக்கியோ நகரில் நேற்று ஒரே நாளில் 2848 புதிய கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இன்று 3,177 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகி உள்ளது இத்தகவலை டோக்கியோ பெருநகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 329 அதிகமாகும்
அவர்களின் 20 வயதிற்குட்பட்டவர்கள் (1,078 பாதிப்புகள்), அவர்களின் 30 வயக்குட்பட்டவர்கள் (680) மற்றும் 40க்குட்பட்டவர்கள் (485)388 பாதிப்புகள் 19 வயதிற்குட்பட்டவர்கள்.
டோக்கியோவில் கடுமையான அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆகும், இது செவ்வாய்க்கிழமையை விட இரண்டு குறைந்துள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒலிம்பிக்கைப் பொறுத்தவரை கொரோனா பாதிப்பு 169 ஆக அதிகரித்துள்ளது. இதில் வீரர்கள், அதிகாரிகள், நிர்வாகிகளும் அடங்குவர்.
இந்த ஒலிம்பிக் போட்டிகளே அங்கு எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட நிலையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அடங்காத கொரோனா 2வது நாளாக அதிகபட்ச பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாசிட்டிவ் அதிகரித்துக் கொண்டே செல்வதால் அங்கு ஒலிம்பிக் போட்டிகள் மீதான ஆர்வம் நாளுக்கு நாள் குறைந்து பீதி தான் அதிகரித்து வருகிறது.
Related Tags :
Next Story