ஆப்கானிஸ்தானில் கடந்த 2 வாரங்களில் பொதுமக்களில் 18 பேர் பலி


ஆப்கானிஸ்தானில் கடந்த 2 வாரங்களில் பொதுமக்களில் 18 பேர் பலி
x
தினத்தந்தி 13 Aug 2021 8:25 PM GMT (Updated: 13 Aug 2021 8:25 PM GMT)

ஆப்கானிஸ்தானில் 2 வாரங்களில் பொதுமக்களில் 18 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.


காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படும் நிலையில், தலிபான்கள் முக்கிய நகரங்களை கைப்பற்றி வருகின்றனர்.

அவர்களை கட்டுப்படுத்த ராணுவம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  இந்நிலையில், ஹெராத் மாகாணத்தில் கடந்த 2 வாரங்களில் பொதுமக்களில் 18 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.  260 பேர் காயமடைந்து உள்ளனர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

அவர்களில் 31 குழந்தைகள், 24 பெண்கள் அடங்குவார்கள்.  அவர்கள் ஹெராத் நகரில் உள்ள மாகாண மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story