தூங்கிய அதிகாரிகள்...! தப்பிய சிறைக் கைதிகள்...!


தூங்கிய அதிகாரிகள்...!  தப்பிய சிறைக் கைதிகள்...!
x
தினத்தந்தி 8 Sep 2021 5:17 AM GMT (Updated: 8 Sep 2021 5:28 AM GMT)

இஸ்ரேலிய சிறையில் இருந்து பாலஸ்தீன கைதிகள் தப்பியதற்கு பாதுகாப்பு அதிகாரிகள் தூங்கியதே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

கில்போவா

இஸ்ரேலிய நாட்டில் கில்போவா என்ற இடத்தில் அதி உயர் பாதுகாப்பு கொண்ட சிறைச்சாலையை இஸ்ரேல் அமைத்துள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு இந்த சிறையில் இருந்து சுரங்கம் அமைத்து 6 பாலஸ்தீன கைதிகள் தப்பிச் சென்றனர். கைதிகள் சுரங்கப் பாதையில் இருந்து சுற்றுச் சுவரைத் தாண்டி வெளியேறும் காட்சிகளுடன்,  அதனைக் கண்காணிக்கும் அதிகாரிகள் தூங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது. 

தப்பி சென்றவர்களில்  ஐந்து பேர் 'இஸ்லாமிக் ஜிகாத்' எனும் அமைப்பின் உறுப்பினர்கள்; ஒருவர் அல்-அக்சா தியாகிகள் படை எனும் தீவிரவாதக் குழுவின் முன்னாள் தலைவர்.

சிறையில் இருந்த ஒரு போஸ்டருக்கு பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த துருப்பிடித்த ஸ்பூன் ஒன்றைக் கொண்டு இவர்கள் இந்த சுரங்கத்தை தோண்டி உள்ளனர்.

இவர்கள் சிறை அறையின் கழிவறையில் தோண்டிய குழி, சிறையின் பின்புறம்  இருந்த ஒரு வெற்று இடத்தை சென்றடைந்தது.

தரைக்கு அடியில் இருந்த காலி இடத்தை தாங்கள் தோண்டிய குழி மூலம் சென்றடைந்த அந்த ஆறு பேரும் அங்கிருந்து ஒரு சுரங்கத்தை தோண்டி சிறையின் சுற்றுச் சுவருக்கு வெளியே உள்ள ஒரு சாலையில் வரை தோண்டி அதன் மூலம் தப்பியுள்ளனர்.

Next Story