சோமாலியாவில் விமான நிலையத்தில் நில கண்ணிவெடி தாக்குதல்; 5 பேர் காயம்


சோமாலியாவில் விமான நிலையத்தில் நில கண்ணிவெடி தாக்குதல்; 5 பேர் காயம்
x
தினத்தந்தி 20 Sep 2021 12:56 AM GMT (Updated: 20 Sep 2021 12:56 AM GMT)

சோமாலியாவில் விமான நிலையம் உள்ளே ஏற்பட்ட நிலக்கண்ணி வெடி தாக்குதலில் 5 பேர் காயமடைந்து உள்ளனர்.

ஹிரன்,

சோமாலியா நாட்டின் ஹிரன் பகுதியில் புலாபுர்தே நகரில் மறுசீரமைப்பு ஏற்படுத்திய விமான நிலையத்தின் உள்ளே அல்-சபாப் பயங்கரவாதிகள் நில கண்ணிவெடிகளை புதைத்து வைத்து உள்ளனர்.

இந்த கண்ணிவெடிகள் பின்னர் வெடித்து உள்ளன.  இந்த தாக்குதலில் 5 பேர் காயமடைந்து உள்ளனர்.  விமான நிலையத்தின் ஒரு பகுதியும் சேதமடைந்து உள்ளது.  இந்த தாக்குதலுக்கு அல்-சபாப் பயங்கரவாதிகள் அமைப்பு பொறுப்பேற்று உள்ளது.


Next Story