நைஜீரியா: இருதரப்பினர் இடையே நடந்த மோதலில் 37 பேர் பலி


நைஜீரியா: இருதரப்பினர் இடையே நடந்த மோதலில் 37 பேர் பலி
x
தினத்தந்தி 27 Sep 2021 9:58 PM GMT (Updated: 27 Sep 2021 9:58 PM GMT)

நைஜீரியாவில் இரு தரப்பினர் இடையே நடந்த மோதலில் 37 பேர் உயிரிழந்தனர்.

அபுஜா,

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஹூடனா மாகாணம் மடாமி கிராமத்தில் பழங்குடியின மக்களுக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரின் கிராமத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 37 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.

வன்முறை மேலும் பல கிராமங்களுக்கு பரவி வருவதால் அதை தடுக்க ஹூடனா மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Next Story